For Daily Alerts
Just In
ஆடு, கோழி பலியிடத் தடை: "சிறுத்தைகள்" எதிர்ப்பு
திருச்சி:
ஆடு, கோழி பலியிடுதலைத் தடுக்கும் அரசின் உத்தரவை எதிர்த்து போராட்டம் நடத்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சி முடிவு செய்துள்ளது.
அக் கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கோவில்களில் ஆடு, கோழிகளை பலியிடுவதைத் தடை செய்யும் உத்தரவு வன்மையாககண்டிக்கத்தக்கது. இதை அரசு வாபஸ் பெற வேண்டும். ஆடு, கோழி வெட்டுவது மூடப் பழக்கமல்ல,தொன்று தொட்டு தொடர்ந்து வரும் நமது மரபு.
உயிர் வதை கூடாது என்று அரசு கருதுமானால், கசாப்புக் கடைகளுக்கும் இந்த சட்டம் பொருந்துமாஎன்பதை அரசு விளக்க வேண்டும்.
இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி போராட்டம் நடத்துவோம். வரும் 13ம் தேதி மதுரையில்நடக்கும் எங்கள் அமைப்பின் மையக் குழுவில் என்ன போராட்டம் என்பது முடிவு செய்யப்படும்என்றார்.
Comments
Story first published: Thursday, September 11, 2003, 5:30 [IST]