விரைவில் காவிரி ஆணையக் கூட்டம்: கருணாநிதியிடம் வாஜ்பாய் உறுதி
சென்னை:
காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தை விரைவில் கூட்டுவதாக தன்னிடம் பிரதமர் உறுதியளித்ததாக திமுக தலைவர்கருணாநிதி கூறினார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று மத்திய அமைச்சர் முரசொலி மாறனைச் சந்தித்த பின்கருணாநிதியுடன் பிரதமர் வாஜ்பாய் ஆலோசனை நடத்தினார்.
அப்போது காவிரி விவகாரத்தை கருணாநிதி கிளப்பினார். காவிரியில் நீர் விட கர்நாடகம் மறுத்து வருவதால் இந்தஆண்டும் குறுவை, சம்பா பயிர்களை இழந்து வாடும் நிலைக்கு தமிழக விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளதைகருணாநிதி சுட்டிக் காட்டினார்.
இதையடுத்து விரைவில் காவிரி டெல்டா மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு காவிரி நதி நீர்ஆணையத்தைக் கூட்டி நீர் விடுவது குறித்து பேசுவதாக தன்னிடம் வாஜ்பாய் உறுதியளித்ததாக பின்னர்நிருபர்களிடம் கருணாநிதி கூறினார்.
இது தவிர மற்ற அரசியல் விவகாரங்கள் ஏதும் பேசப்பட்டதா என்று தெரியவில்லை. கருணாநிதியைச் சந்தித்த பின்ஆளுநர் மாளிகைக்குப் புறப்பட்ட பிரதமர் நிருபர்களிடம் பேச மறுத்துவிட்டார்.