திண்டுக்கல் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விடிய விடிய சோதனை
திண்டுக்கல்:
திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் (ஆர்.டி.ஓ.) விடிய விடிய சோதனைநடத்தப்பட்டது. இதில் ரூ. 92,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இரு ஊழியர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
ஓட்டுனர் உரிமம் வழங்குவது, வாகனங்களுக்கு பிட்னஸ் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டபணிகளுக்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் அதிகாரிகளும் மற்றும் ஊழியர்களும்ஏகப்பட்ட அளவில் லஞ்சம் வாங்கி வருவதையடுத்து அந்த அலுவலகங்களில் கடந்த ஒரு வாரமாகதீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந் நிலையில் திண்டுக்கல் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் விடிய விடியசோதனை நடத்தினர்.
இதில் அலுவலகத்தில் இருந்த கணக்கில் வராத ரூ. 92,000 ரொக்கப் பணம், 3 செல்போன்கள்ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
2 ஊழியர்களும் அவர்களுடன் சேர்ந்து முறைகேடுகளில் ஈடுபட்ட 5 புரோக்கர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications