இன்று தொடங்குகிறது திமுகவின் பிரமாண்ட மாநாடு
விழுப்புரம்:
விழுப்புரம் நகரில் திமுகவின் பிரமாண்டமான 3 நாள் மாநாடு இன்று தொடங்குகிறது. இதில் பங்கேற்ககருணாநிதி இன்று காலை விழுப்புரம் புறப்படுகிறார்.
விழுப்புரம் மாவட்ட தேர்தல் ஆயத்த மாநாடு என்ற போதிலும், தமிழக பா.ஜ.க.வுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடுக்குப் பிறகு நடக்கும் மிகப் பெரிய திமுக நிகழ்ச்சி என்பதால் இந்த மாநாடு, தமிழகத்தின் ஒட்டு மொத்தகவனத்தையும் ஈர்த்துள்ளது.
விழுப்புரம் மாநாட்டில் பல முக்கிய முடிவுகளை திமுக எடுக்கவுள்ளது. முக்கியமாக எதிர்கால தேர்தல் கூட்டணிகுறித்து தீவிரமாக விவாதிக்கப்படவுள்ளது.
மாநாட்டுப் பந்தல் சுமார் 5 லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்டமானதாக அமைக்கப்பட்டுள்ளது. திமுகதலைவர் கருணாநிதி மேடை வரை காரிலேயே வந்து செல்லும் வகையில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும்அவர் மேடை ஏற சாய்வான பாதையும் அமைத்துள்ளனர்.
கருணாநிதி தங்குவதற்காக மேடைக்குப் பின்புறம் குளிர்சாதன வசதியுடன் குடில் அமைக்கப்பட்டுள்ளது.
மாநாட்டில் கலந்து கொள்வதற்காக திமுக தலைவர் கருணாநிதி இன்று காலை விழுப்புரம் செல்கிறார்.












Click it and Unblock the Notifications