For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொடாவில் கைதான நக்கீரன் கோபால் ஜாமீனில் விடுதலை

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

பொடா வழக்கில் கைது செய்யப்பட்ட நக்கீரன் ஆசிரியர் கோபால் ஜாமீனில் இன்று விடுதலை செய்யப்பட்டார்.தமிழகத்தில் பொடா சட்டத்தில் கைதான ஒருவர் ஜாமீனில் வெளியே வருவது இதுவே முதல்முறையாகும்.

வீரப்பனுக்கும், தமிழ்த் தீவிரவாதிகளுக்கும் உதவியதாக சாதாரண வழக்கில் கைது செய்யப்பட்ட கோபாலைபின்னர் பொடா சட்டத்தில் சிறையில் அடைத்தது தமிழக அரசு. தடை செய்யப்பட்ட தமிழர் விடுதலைப் படையின்நோட்டீஸ்கள் மற்றும் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக கோபால் மீது போலீசார் குற்றம் சாட்டினர்.

கடந்த ஏப்ரல் 11ம் தேதி கைது செய்யப்பட்ட கோபால், கிட்டத்தட்ட 161 நாட்களாக சிறையில்அடைக்கப்பட்டுள்ளார். சட்டரீதியில் தனது கைதை எதிர்த்து இடைவிடாமல் போராடி வந்தார்.

தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கோபால் மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,தன்னை போலீசார் கைது செய்துவிட்டு அவர்களாகவே கொண்டு வந்து துப்பாக்கியையும், தமிழர் விடுதலைப்படையின் நோட்டீஸையும் என்னிடம் இருந்தாகக் காட்டி பொய் வழக்குப் போட்டுள்ளனர் என்று சுட்டிக்காட்டினார். மேலும் சிறையில் தனது உயிருக்கும் ஆபத்து இருப்பதாகக் கூறியிருந்தார்.

கோபாலின் இந்த மனுவின் மீது இன்று தீர்ப்பளித்த நீதிபதி சண்முகம், நீதிபதி மாசிலாமணி ஆகியோர் அடங்கியடிவிஷன் பெஞ்ச், கோபாலை ஜாமீனில் விடுவிப்பதாக அறிவித்தது.

தினமும் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள பெருநகர நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன் கோபால் ஆஜராக வேண்டும்என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதற்கிடையே தான் பொடாவில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும் கோபால் மனு தாக்கல்செய்துள்ளார். அதை விசாரித்த நீதிமன்றம், கோபால் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யக் கூடாது எனபோலீசாருக்குத் தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X