பொடாவில் கைதான நக்கீரன் கோபால் ஜாமீனில் விடுதலை
திருச்சி:
பொடா வழக்கில் கைது செய்யப்பட்ட நக்கீரன் ஆசிரியர் கோபால் ஜாமீனில் இன்று விடுதலை செய்யப்பட்டார்.தமிழகத்தில் பொடா சட்டத்தில் கைதான ஒருவர் ஜாமீனில் வெளியே வருவது இதுவே முதல்முறையாகும்.
வீரப்பனுக்கும், தமிழ்த் தீவிரவாதிகளுக்கும் உதவியதாக சாதாரண வழக்கில் கைது செய்யப்பட்ட கோபாலைபின்னர் பொடா சட்டத்தில் சிறையில் அடைத்தது தமிழக அரசு. தடை செய்யப்பட்ட தமிழர் விடுதலைப் படையின்நோட்டீஸ்கள் மற்றும் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக கோபால் மீது போலீசார் குற்றம் சாட்டினர்.
கடந்த ஏப்ரல் 11ம் தேதி கைது செய்யப்பட்ட கோபால், கிட்டத்தட்ட 161 நாட்களாக சிறையில்அடைக்கப்பட்டுள்ளார். சட்டரீதியில் தனது கைதை எதிர்த்து இடைவிடாமல் போராடி வந்தார்.
தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கோபால் மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,தன்னை போலீசார் கைது செய்துவிட்டு அவர்களாகவே கொண்டு வந்து துப்பாக்கியையும், தமிழர் விடுதலைப்படையின் நோட்டீஸையும் என்னிடம் இருந்தாகக் காட்டி பொய் வழக்குப் போட்டுள்ளனர் என்று சுட்டிக்காட்டினார். மேலும் சிறையில் தனது உயிருக்கும் ஆபத்து இருப்பதாகக் கூறியிருந்தார்.
கோபாலின் இந்த மனுவின் மீது இன்று தீர்ப்பளித்த நீதிபதி சண்முகம், நீதிபதி மாசிலாமணி ஆகியோர் அடங்கியடிவிஷன் பெஞ்ச், கோபாலை ஜாமீனில் விடுவிப்பதாக அறிவித்தது.
தினமும் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள பெருநகர நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன் கோபால் ஆஜராக வேண்டும்என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதற்கிடையே தான் பொடாவில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும் கோபால் மனு தாக்கல்செய்துள்ளார். அதை விசாரித்த நீதிமன்றம், கோபால் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யக் கூடாது எனபோலீசாருக்குத் தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
LPG தட்டுப்பாடு: எரிவாயு சிலிண்டர் விஷயத்தில் அரசியல் பண்ணாதீங்க.. தவெக -
எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு.. விஜய் எதுவும் கருத்து சொன்னாரா? மருத்துவர் ஷர்மிளா கேட்ட கேள்வி! -
விஜய் இனிஷியல் கூட வேண்டாம், தூக்கி எறிந்த மகன்..! ஜோசன் பெயருக்கு பின்னாடி என்ன சேர்த்து இருக்கிறார் பாருங்க! -
கரூர் வழக்கில் விஜய்க்கு புதிய சம்மன்.. இறுக்கும் சிபிஐ! 15 ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு -
CBI Summon: விருப்பமனு பெற்றவர்களிடம் இன்று விஜய் நேர்காணல்! அப்போ டெல்லிக்கு போகலையா? -
விஜய்யின் இமேஜ் உடைந்து விட்டது! பார்த்திபன் அப்படி பேசியதற்கு பின்னால் இருக்கும் காரணம்! பிரபலம் ஓபன் -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
மௌன விரத மாஸ்டர் விஜய்! பெண்களுக்காக பேசுவாரு, திரிஷா பற்றி வாய் திறக்க மாட்டாரு! ப்ளூ சட்டை மாறன் நேரடி அட்டாக் -
ஜாய் கிரிஸில்டா வக்கீலுடன் சீரியல் நடிகை செய்த சதி! நாஞ்சில் விஜயன் வெளியிட்ட ஆதாரம்.. வெளிவரும் ரகசியம்












Click it and Unblock the Notifications