சென்னையில் ரூ. 77 கோடியில் உருவாகிறது அதிநவீன சிறை
சென்னை:
சென்னை அருகே புழல் பகுதியில், ரூ. 77.09 கோடி மதிப்பில் புதிய மத்திய சிறைச்சாலை அமைக்கப்படவுள்ளது.இதற்கு முதல்வர் ஜெயலலிதா இன்று அடிக்கல் நாட்டினார்.
திருவள்ளூர் மாவட்டம் புழல் பகுதியில் 221.92 ஏக்கர் பரப்பளவில் இந்த புதிய மத்திய சிறைச்சாலைஅமையவுள்ளது. அதி நவீன வசதிகளுடன் இந்தச் சிறைச் சாலை தான் இந்தியாவிலேயே மாநில அரசின்கட்டுப்பாட்டில் உள்ள மிகப் பெரிய சிறைச்சாலையாக இருக்கும்.
பெண்களுக்கு தனியான சிறை, நவீன பாதுகாப்பு வசதிகள், மருத்துவமனை, கைதிகளுக்கு பயிற்சிக் கூடங்கள்,கல்விக் கூடங்கள் உள்ளிட்ட சிறப்பு வசதிகளுடன் இந்தப் புதிய சிறைச் சாலை கட்டப்படவுள்ளது.
இன்று காலை நடந்த விழாவில் முதல்வர் ஜெயலலிதா சிறைச் சாலைக்கு அடிக்கல் நாட்டினார். இங்கு மொத்தம்2,500 ஆண் கைதிகளையும், 500 பெண் கைதிகளையும் அடைக்க முடியும். ஆண் கைதிகளுக்கு இரு பிரிவுகளும்பெண் கைதிகளுக்கு என தனியாக ஒரு சிறைப் பிரிவும் கட்டப்படவுள்ளன.