தடையை மீறி ஜாதி கலவர பகுதியில் நுழைந்த பா.ம.க. எம்எல்ஏ கைது
கரூர்:
தடை உத்தரவை மீறி ஜாதிக் கலவரம் நடந்த கிராமத்திற்குள் செல்ல முயன்ற பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏவும்,தேவேந்திர இளைஞர் கழக நிறுவனருமான முருகவேல் ராஜன் உள்ளிட்ட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் மேட்டு மகாதானபுரம் கிராமத்தில் கடந்த திங்கள்கிழமை பெரும் ஜாதிக் கலவரம் ஏற்பட்டு பலர்படுகாயமடைந்தனர். இதையடுத்து ஜாதி பிரமுகர்கள் இங்கு வரக் கூடாது என்று போலீஸார் தடை விதித்தனர்.
இந் நிலையில் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளரை அணுகிய வந்தவாசி தொகுதி தலித் எம்.எல்.ஏவானமுருகவேல்ராஜன், மேட்டு மகாதானபுரத்திற்குச் செல்ல அனுமதி கோரினார். ஆனால், அவருக்கு அனுமதிமறுக்கப்பட்டது.
இருப்பினும் தடையை மீறி அந்த கிராமத்துக்குள் முருகவேல்ராஜன் நுழைய முயன்றார். அவருடன் தேவேந்திரஇளைஞர் கழக நிர்வாகிகள் சிலரும் மேட்டு மகாதானபுரத்திற்கு சென்றார்.
ஆனால், வழியிலேயே அவர்களை தடுத்து நிறுத்திய போலீஸார் அனைவரையும் கைது செய்தனர். எம்.எல்.ஏ. மீதுவழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications