கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்ய ராமதாஸ் கோரிக்கை
திண்டிவனம்:
காவிரி ஆணையக் கூட்டத்தில் கலந்து கொள்ள கர்நாடக அரசு மறுத்தால், அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவின்கீழ் அந்த மாநில அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ்கூறியுள்ளார்.
திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பிரதமர் வாஜ்பாய் வெளிநாட்டிலிருந்து திரும்பிய உடன் காவிரி ஆணையக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். அதில்கர்நாடக அரசும் கலந்து கொள்ள உத்தரவிட வேண்டும்.
ஒரு வேளை கர்நாடக அரசு கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தால், அந்த அரசு மீது கடும் நடவடிக்கைஎடுக்க வேண்டும். அரசை 356-வது சட்டப் பிரிவின் கீழ் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
கர்நாடக அரசு அடி பணியாவிட்டால், அதை பணிய வைக்க வேண்டியது மத்திய அரசின் கடமை.
சுதந்திரப் போராட்ட வீரர்கள் மருது பாண்டியர் சகோதரர்கள் நினைவாக தபால் தலை வெளியிட வேண்டியதுஅவசியமே. இதுதொடர்பாக பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளதை வரவேற்கிறேன்.
வீட்டு மின்சாரத்திற்கு விதிக்கப்பட்ட 5 சதவீத கூடுதல் வரியை ரத்து செய்த ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்என்றார் ராமதாஸ்.