பலியிட விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மூ.மு.க. வழக்கு
சென்னை:
கோவில்களில் ஆடு, கோழிகளைப் பலியிட தடை விதித்துள்ளதை எதிர்த்து மூவேந்தர் மூன்னேற்றக் கழக தலைவர்டாக்டர் சேதுராமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
சேதுராமன் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 1950ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட விலங்கு வதை தடை சட்டத்தைஇத்தனை காலத்திற்குப் பிறகு, குறிப்பிட்ட அரசியல் காரணங்களுக்காக தீவிரமாக அமல்படுத்த தமிழக அரசுமுயற்சிக்கிறது.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்களது தெய்வக் குற்றத்தை தவிர்ப்பதற்காக கோவில்களில் ஆடு,கோழிகளைப் பலியிடுவது காலம் காலமாக நடந்து வரும் செயல். இதை தடை செய்துள்ளது, தனி மனிதஉரிமையில் தலையிடுவதாகவும்.
எனவே, இந்த உத்தரவை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
மனுவைப் பரிசீலனை செய்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி குலசேகரன் ஆகியோர் அடங்கியபெஞ்ச், விசாரணையை 3 வார காலத்திற்கு தள்ளி வைத்தது.












Click it and Unblock the Notifications