முறை தவறிய காதல்.. கல்யாணம்.. தற்கொலை..
காரைக்குடி:
திருமணம் செய்த சில மணி நேரங்களிலேயே விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டது காதல் ஜோடி.
காரைக்குடியைச் சேர்ந்தவர்கள் சங்கர் மற்றும் லட்சுமி. இருவரும் காதலித்து வந்தனர். ஆனால், இதில் லட்சுமிக்குசங்கர் ஒன்றுவிட்ட சித்தப்பா ஆவார். இதனால், இது முறை தவறான உறவு என்று சொல்லி இவர்களது காதலைபெற்றோர்கள் அங்கீகரிக்கவில்லை.
இதையடுத்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறி மலுக்கய்யா கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.இதை தங்களது வீடுகளுக்கும் தொலைபேசி மூலம் தெரிவித்தனர். ஆனால், இருவரையும் வீட்டுக்கு வரவேண்டாம் என இரு தரப்பு பெற்றோர்களும் கூறிவிட்டனர்.
மாலையும், கழுத்துமாக நின்ற காதல் தம்பதிகள், தங்களது நிலையை எண்ணி வருந்தினர். தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கு வந்த இருவரும் விஷத்தை அருந்தினர். பின்னர் கோவிலின் வெளியிலேயே மயங்கிவிழுந்து சிறிது நேரத்தில் இருவருமே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்த காரைக்குடி தெற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரது பிணங்களையும் கைப்பற்றிபிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இரு வீட்டாரிடமும் உடல்களை ஒப்படைத்தனர்.
இதையடுத்து காதலர்களின் பிணங்கள் அருகருகே வைத்து எரியூட்டப்பட்டன.












Click it and Unblock the Notifications