மதுரை அரசு மருத்துவமனையில் திருடு போன குழந்தை மீட்பு: திருடிய பெண் கைது
மதுரை:
மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தையைத் திருடிய பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த 15ம் தேதி, அவசர சிகிச்சைப் பிரிவில், இன்குபேட்டர் கருவியில்வைக்கப்பட்டிருந்த ஆண் குழந்தை காணாமல் போனது.
குழந்தையைக் கண்டுபிடித்துக் கொடுக்காமல் மருத்துவமனையை விட்டு போக மாட்டோம் என்று குழந்தையின்தாய் உள்ளிட்டோர் கூறி அங்கேயே இருந்து உள்ளிருப்பப் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் மதுரை அருகே உள்ள சோழவந்தான், இரும்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரி என்ற பெண்ணைபோலீஸார் கைது செய்துள்ளனர். அந்தப் பெண்தான், மருத்துவமனையிலிருந்து குழந்தையைத் திருடிச் சென்றதாகபோலீஸார் தெரிவித்துள்ளனர்.
2 பெண் குழந்தைகளுக்குத் தாயான ஈஸ்வரிக்கு, இனிமேல் குழந்தை பிறக்காது என்று டாக்டர்கள் கூறி விட்டதால்,சோகமடைந்த ஈஸ்வரிக்கு, ஆண் குழந்தை ஆசை அதிகரித்தது.
இதையடுத்து மதுரைக்கு வந்த அவர், அவசர சிகிச்சைப் பிரிவில் இங்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்த ஆண்குழந்தையைத் திருடிச் சென்றதாக போலீசார் கூறுகின்றர்.
இந்தக் குழந்தை குறை மாதத்தில் பிறந்ததால், இங்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications