பலியிட தடை: ஜெயலலிதாவுக்கு ஆர்.வி. பாராட்டு
சென்னை:
கோவில்களில் ஆடு, கோழிகளை பலியிடுவதற்கு முதல்வர் ஜெயலலிதா தடை விதித்துள்ளதை முன்னாள் குடியரசுத்தலைவர் ஆர்.வெங்கட்ராமன் பாராட்டியுள்ளார்.
இந்திய சைவ காங்கிரஸ் சார்பில் சென்னையில் நடந்த கருத்தரங்கில் ஆர்.வெங்கட்ராமன் பேசுகையில்,
கோவில்களில் ஆடு, கோழிகளைப் பலியிடுவதை எந்தக் காரணம் கொண்டும் ஆதரிக்க முடியாது.
கடவுளையும், மிருகங்களை பலிகொடுப்பதையும் சமமாகக் கருத முடியாது. அனைத்து உயிர்களும் மதிக்கப்படவேண்டியவை.
இந்த சட்டம் தமிழகத்திற்கு மட்டும் போதாது, அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றார்.
காஞ்சி மடத்தின் தீவிர பக்தர் ஆர்.வி. என்பது குறிப்பிடத்தக்கது. காஞ்சி சங்கராச்சாரியார் சொல்லித் தான்பலியிடத் தடை கொண்டு வரப்பட்டுள்ளதாகப் பேசப்படும் நிலையில் ஆர்.வி. இவ்வாறு பேசியுள்ளதுமுக்கியத்துவம் பெறுகிறது.
பூசாரிகள் எதிர்ப்பு:
இதற்கிடையே ஆடு, கோழிகளை பலியிட விதிக்கப்பட்டுள்ள தடை, மக்களின் வழிபாட்டு உரிமையைத் தடைசெய்யும் வகையில் உள்ளதாக மதுரை மாவட்டம் கருமாத்தூரில் நடந்த கோவில் பூசாரிகள் மாநாட்டில் கண்டனம்தெரிவிக்கப்பட்டது.
உசிலம்பட்டி அருகே உள்ள கருமாத்தூரில் தமிழக கோவில் பூசாரிகள் நடந்த இந்த மாநாட்டில் ஏராளமான சிறுகோவில்கள், கிராமக் கோவில்களைச் சேர்ந்த பூசாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் பேசியவர்கள், கோவில்களில் ஆடு, கோழிகளை பலியிடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையைகடுமையாக ஆட்சேபித்தனர். இந்தத் தடை, மக்களின் வழிபாட்டு உரிமையில் தலையிடுவதாக உள்ளதாகஅவர்கள் கருத்து தெரிவித்தனர்.