கூடங்குளம் மின் நிலைய கருவியில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி
நெல்லை:
கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு லாரியில் கொண்டு செல்லப்பட்ட ராட்சத கருவி மின்சார வயரில் உரசியது.இதையடுத்து உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்ததில் லாரியில் இருந்த ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் தூக்கிவீசப்பட்டார்.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணு மின் நிலையம் அமையவுள்ளது. இந்த நிலையத்துக்கு மிகப் பெரியகருவி ரஷியாவிலிருந்து கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்டது.
அங்கிருந்து லாரி மூலம் இந்தக் கருவி கூடங்குளத்திற்குக் கொண்டு வரப்பட்டது. இந்தக் கருவி மிக உயரமாகஇருந்ததால், மின்சார வயர்களில் உரசும் வாய்ப்பு ஏற்பட்டது. இதனால் இந்த லாரி செல்லும் வழியில் மின்இணைப்பைத் துண்டிக்குமாறு கூடங்குளம் மின் நிலைய அதிகாரிகள் மின் வாரியத்திடம் தெரிவித்திருந்தனர்.ஆனால், அதை மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம் செய்துவிட்டதாகத் தெரிகிறது.
இந் நிலையில் பாளையங்கோட்டை பகுதியில் லாரி வந்தபோது, அந்தக் கருவி உயர் அழுத்த மின்சார வயரில்உரசியது. அதிலிருந்து பாய்ந்த மின்சாரம் லாரியைத் தாக்கியது. இதில் லாரியில் பயணம் செய்த ஒருவர்பலியானார். மற்றொருவர் தூக்கி வீசப்பட்டார்.












Click it and Unblock the Notifications