ஆற்றங்கரையில் கிடந்த ராணுவ வெடிகுண்டு!!
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை புறநகர்ப் பகுதியான நஞ்சுண்டாபுரம் பகுதியில், நொய்யல் ஆற்றங்கரையில் 10.45 கிலோ எடையுள்ள,வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இது ராணுவத்தில் பயன்படுத்தப்படும் குண்டாகும்.
நஞ்சுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், நொய்யல் ஆற்றங் கரையில் மணல் அள்ளுவதற்காக தோண்டிக்கொண்டிருந்தபோது, குண்டைப் பார்த்தார். உடனடியாக போலீஸாருக்கு அவர் தகவல் தெரிவித்தார்.
போலீஸார் விரைந்து வந்து பார்த்தபோது, அது ராணுவத்தில் பயன்படுத்தும் வெடிகுண்டு என்றும், அது இன்னும்வெடிக்கக் கூடிய நிலையில் இருப்பதையும் கண்டுபிடித்தனர். உடனடியாக ராணுவ அதிகாரிகளுக்குத் தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வெடிகுண்டு ராணுவ அதிகாரிகளால் எடுத்துச் செல்லப்பட்டு செயலிழக்க வைக்கப்படும்.
ராணுவத்துக்கு சொந்தமான 10 கிலோ குண்டு எப்படி ஆற்றங்கரைக்கு வந்தது என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications