திமுக நாத்திகர்கள் நிறைந்த கட்சியல்ல: இல.கணேசன்
திருச்செந்தூர்:
திமுக நாத்திகர்கள் நிறைந்த கட்சியல்ல. அதில், ஆத்திகர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று பாரதீய ஜனதாக்கட்சியின் செயலாளர் இல.கணேசன் கூறினார்.
திமுக போன்ற நாத்திகக் கட்சிகள் ஆட்சிக்கு வந்தது தான் தமிழகத்தின் மிகப் பெரிய வரலாற்றுத் தோல்வி எனகாஞ்சி சங்கராச்சாரியாரின் விழாவில் பேசினார் கணேசன். இதற்கு, திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம்தெரிவித்திருந்தார்.
இந் நிலையில் திருச்செந்தூரில் இல.கணேசன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களின் கட்சி திமுக என்ற பேச்சு உள்ளது. ஆனால், உண்மை அதுவல்ல. திமுகவிலும்,கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் நிறையவே உள்ளனர். கடவுளை நம்புபவர்கள் நிறையப் பேர் திமுகவில் இருப்பதுவரவேற்கப்பட வேண்டிய விஷயமாகும்.
அயோத்தி வழக்கில் அத்வானி மட்டும் விடுதலை செய்யப்பட்டது வருத்தம் தருகிறது. உமாபாரதி, ரளி மனோகர்ஜோஷி ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டிருந்தால் கூடுதல் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.
2004ம் ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் யாருடன் கூட்டணி சேருவது, தனித்துப்போட்டியிடுவதா என்பது குறித்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன்தான் முடிவு செய்யவுள்ளோம் என்றார்அவர்.