For Quick Alerts
For Daily Alerts
Just In
சிவகங்கை சென்றார் ஜெயலலிதா
சிவகங்கை:
ரூ. 208 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கி வைக்க முதல்வர் ஜெயலலிதா சிவகங்கை சென்றுள்ளார்.
மாவட்டங்களில் திட்டப் பணிகளை நேரடியாக சென்று தொடங்கி வைத்து வரும் முதல்வர் ஜெயலலிதா, இன்றுபிற்பகல் சிவகங்கை புறப்பட்டுச் சென்றார்.
அங்குள்ள மன்னர் துரைசிங்கம் அரசினர் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் விழாவில், ரூ. 208 கோடிமதிப்பிலான அரசுத் திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார். மேலும், 26,000 பேருக்கு உதவிகளையும்வழங்குகிறார்.
நிகழ்ச்சிக்கு சபாநாயகர் காளிமுத்து தலைமை வகிக்கிறார்.
சிவகங்கை மாவட்ட முக்கியத் தலைவர்களின் ஒருவரான தா.கிருட்டிணன் கொலைக்குப் பின் அங்கு ஜெயலலிதாசெல்வது இதுவே முதல்முறையாகும். இதனால் இன்றைய கூட்டத்தில் திமுகவை மிகக் கடுமையாக ஜெயலலிதாவிமர்சிப்பார் என்று தெரிகிறது.
Comments
Story first published: Tuesday, September 23, 2003, 5:30 [IST]