கண்ணப்பன் மீது ஜெ. பாய்வது ஏன்? வைகோ விளக்கம்
சென்னை:
மத்திய மரபு சாரா எரி சக்தித்துறை வழங்கிய மானியங்களை தமிழக அரசு சரியாக பயன்படுத்தவில்லை என்றுஅந்தத் துணையின் இணை அமைச்சர் கண்ணப்பன் புகார் கூறியதால் தான் அவரை பழிவாங்க, பொடா சட்டத்தைப்பயன்படுத்த முதல்வர் ஜெயலலிதா நினைக்கிறார் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் வைகோ உள்ளிட்ட 9 பேர் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்கள்.
பின்னர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மத்திய மரபு சாரா எரிசக்தித் துறைஅமைச்சகம் வழங்கும் மானிய உதவிகளை தமிழக அரசு சரியாக பயன்படுத்தாமல் வீணடித்து வருகிறது. இதைசமீபத்தில் அமைச்சர் கண்ணப்பன் சுட்டிக் காட்டி கண்டித்தார்.
இந்த குற்றச் சாட்டினால் ஆத்திரமடைந்துள்ள ஜெயலலிதா, அவரைப் பழிவாங்குவதற்காக பொடா சட்டத்தைக்காட்டி மிரட்டுகிறார். தமிழகத்தில் அரசியல் எதிரிகளைப் பழிவாங்கவே பொடா சட்டம் பயன்படுத்தப்படுகிறது.
கண்ணப்பன் மீது பொடா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதை அற வழியில் சந்திக்க மதிமுக தயார்என்றார்.












Click it and Unblock the Notifications