ஆசிரியர் அடித்ததால் மாணவன் தற்கொலை: தேர்வைப் புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துரை அருகே உள்ள வெள்ளவேடு பகுதியில் ஆசிரியர் அடித்ததால் மனமுடைந்தமாணவன் தற்கொலை செய்து கொண்டான். இதையடுத்து மாணவர்கள் அனைவரும் தேர்வுகளைப் புறக்கணித்துஉள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.
வெள்ளவேடு அரசு உயர் நிலைப் பள்ளியில் 12-வது வகுப்பு படித்து வந்தவன் வெள்ளியங்கிரி. சரியாகப்படிக்கவில்லை என்ற காரணத்தால், வெள்ளியங்கிரியை அவனது ஆசிரியர் திட்டி, அடித்துள்ளார். இதனால்மனமுடைந்த வெள்ளியங்கிரி வகுப்பறையிலேயே விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டான்.
வகுப்பறையிலேயே மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பள்ளி மாணவர்களிடையே பெரும்கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள் அனைவரும் பள்ளித் தேர்வைபுறக்கணித்து பள்ளி மைதானத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுத்து அவரைக் கைது செய்ய வேண்டும் என்று மாணவர்கள்கோரிக்கை விடுத்தனர். காவல்துறை டி.எஸ்.பி, வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாகள் விரைந்து வந்து உரியநடவடிக்கை எடுப்பதாக உறுதிமொழி அளித்த பிறகே மாணவர்கள் கலைந்தனர்.












Click it and Unblock the Notifications