வீரப்பன் கூட்டாளிகளுக்கு 3 ஆண்டு கடுங்காவல்
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
சந்தனக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் 3 பேருக்கு ஈரோடு கூடுதல் குற்றவியல் நீதிமன்றம் 3 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
கடந்த 1995ம் ஆண்டு பர்கூர் வனப் பகுதியிலிருந்து, 3 வனக் காவலர்களை வீரப்பன் கும்பல் கடத்திச் சென்றது.இதுதொடர்பாக வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அன்புராஜ், தங்கராஜ், அப்பர்சாமி ஆகிய 3 வீரப்பன் கூட்டாளிகளை கடந்த 1998ம்ஆண்டு அதிரடிப்படை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் மீது ஈரோடு மாவட்ட கூடுதல் குற்றவியல்நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.
இதில் இப்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.மூன்று பேருக்கும் தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும்,தலா 3,000 அபராதம் விதித்து நீதிபதி கலையரசன் தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications