For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லி விரைந்தார் கண்ணப்பன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பொடா சட்டத்தில் கைதாக வாய்ப்புள்ள நிலையில் மத்திய அமைச்சர் கண்ணப்பன் அவசரமாக டெல்லி விரைந்தார்.

பொடா வழக்கில் மட்டுமில்லாது எந்த வழக்கிலும் மத்திய அமைச்சரை கைது செய்ய மாநில அரசுக்கு எந்தத்தடையுமில்லை என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதனால் எந்த நேரத்திலும் அவர் கைதாக வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது. இந் நிலையில் தனது சொந்த ஊரானகோவையில் நேற்று பல அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் அவசரமாக நேற்று பிற்பகலிலேயே டெல்லிசென்றுவிட்டார்.

பொடா விஷயத்தில் மத்திய அரசு தலையிட முடியாது, மாநில அரசைக் குறை கூற முடியாது என துணைப் பிரதமர்அத்வானி கருத்து தெரிவித்துள்ள நிலையில் கண்ணப்பனின் அவரச டெல்லி பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.இன்று அவர் அத்வானியையும் பா.ஜ.க மூத்த தலைவர்களையும் சந்திப்பார் என்று தெரிகிறது.

பிரதமர் தனது அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் வரை டெல்லியிலேயேதங்கியிருக்கவும் கண்ணப்பன் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X