For Daily Alerts
Just In
கணவருடன் மோதல்: 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை
திருநெல்வேலி:
குடும்பத் தகராறு காரணமாக 2 குழந்தைகளுடன் மனைவி தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை மாவட்டம் தாழையூத்து நகரைச் சேர்ந்தர் சாமுவேல். இவரது மனைவி பெயர் ஜோதி. இவர்களுக்கு 2வயதில் ஒரு குழந்தையும், 20 நாட்களே ஆன கைக்குழந்தையும் உள்ளது.
சாமுவேல் அடிக்கடி ஜோதியுடன் சண்டை போடுவது வழக்கமாம். இந்த நிலையில் நேற்றும் இருவருக்கும்இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த ஜோதி, வீட்டிலிருந்த மண்ணெண்ணையை தன் மீதும்குழந்தைகள் மீதும் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.
இதில் ஜோதியும், 2 குழந்தைகளும் பரிதாபமாக இறந்தனர். அவர்களை காப்பாற்ற முயன்ற சாமுவேல்படுகாயமடைந்தார்.
Comments
Story first published: Thursday, September 25, 2003, 5:30 [IST]