காதலர்களை முட்டி போட வைத்த எஸ்.ஐ.: மனித உரிமை ஆணையம் விசாரணை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் காதலர்களை முட்டி போட வைத்ததாக எழுந்த புகாரின்பேரில் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மணிமொழியிடம் மனிதஉரிமை ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது.

கரூரைச் சேர்ந்த சார்லஸ் மற்றும் சுபத்ரா ஆகிய இரு காதலர்களும் வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் பாதுகாப்பு கோரி, பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

அப்போது அங்கு பணியில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் மணிமொழி, காதலர்கள் இருவரையும் திட்டியதோடு, அரைமணி நேரம் முட்டிக் கால் போடுமாறு பணித்துள்ளார். வேறு வழியின்றி காதலர்கள் இருவரும் முட்டிக் கால்போட்டபடி இருந்தனர்.

இதுதொடர்பாக தினமலர் நாளிதழில் செய்தி படத்துடன் வெளியாகியிருந்தது. இதையடுத்து சென்னையில் உள்ளமாநில மனித உரிமைகள் ஆணையம் இதுகுறித்து விசாரிக்குமாறு தனது இன்ஸ்பெக்டர் பொன்னுச்சாமியைபணித்தது.

இன்ஸ்பெக்டர் பொன்னுச்சாமி, சப் இன்ஸ்பெக்டர் மணிமொழியிடம் விசாரணை நடத்தினார். காதலர்கள்சார்லஸும், சுபத்ராவும், சென்னைக்கு வரவழைக்கப்பட்டு அவர்களிடம் விசாரணை நடந்தது. சப் இன்ஸ்பெக்டர்மீது தவறு இருப்பது நிரூபிக்கப்பட்டால், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மனித உரிமைகள்ஆணையம் கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+