ஸ்ரீதேவியின் கட்டடத்தை இடிக்க உயர் நீதிமன்றம் மீண்டும் தடை
சென்னை:
நடிகை ஸ்ரீதேவிக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ள 8 மாடிக் கட்டடத்தின் முதல் 4 மாடிகளை இடிக்கசென்னை மாநகராட்சிக்கு, உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சென்னை மயிலாப்பூர், சி.ஐ.டி. காலனி பகுதியில் ஸ்ரீதேவிக்குச் சொந்தமான இடத்தில், 8 மாடிக் குடியிருப்புகட்டப்பட்டுள்ளது. சாந்தி பில்டர்ஸ் நிறுவனம் இந்த குடியிருப்பை கட்டியுள்ளது.
4 மாடிகளை மட்டுமே கட்ட அனுமதி அளித்திருந்த நிலையில் கூடுதலாக 4 மாடிகளைக் கட்டியதால் கட்டடம்ஆட்டம் கண்டது. இடிந்து விழும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து அனுமதியின்றி கட்டப்பட்ட முதல் நான்குதளங்களை இடித்துத் தள்ள சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது.
இதை எதிர்த்து ஸ்ரீதேவி உயர் நீதிமன்றத்தை அணுகினார். இதைத் தொடர்ந்து கட்டடத்தை இடிக்க இடைக்காலத்தடை பிறப்பித்த நீதிமன்றம் 3 பொறியாளர்கள் கொண்ட குழுவை அமைக்க உத்தரவிட்டது. அந்தக் குழுகட்டடத்தை ஆராயந்தது.
கட்டடம் அபாயகரமான நிலையில் இருப்பதால் இடிக்கலாம் என்று பொறியாளர் குழு பரிந்துரைத்தது.இதையடுத்து மாநகராட்சியின் இடிப்பு நடவடிக்கை சரியானதே என்று நீதிபதி சதாசிவம் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து ஸ்ரீதேவி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த அப்பீல் மனுவை விசாரித்ததலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி குலசேகரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், கட்டடத்தைஇடிப்பதற்கு மாநகராட்சிக்கு இடைக்காலத் தடை விதித்தனர்.
அதே நேரத்தில் அந்தக் கட்டடத்தில் கட்டுமானப் பணிகளும், வேறு யாரையும் குடியமர்த்துவதற்கும் தடை விதித்துஉத்தரவிட்டனர்.
இந்த மனு மீதான அடுத்த கட்ட விசாரணை அக்டோபர் 9ம் தேதி நடைபெறும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.












Click it and Unblock the Notifications