இமாம் அலி நினைவு தினம்: மதுரை, திண்டுக்கல்லில் பதற்றம்!
மதுரை:
இமாம் அலியின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் பதற்றம்நிலவி வருகிறது. இரு மாவட்டங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அல்-உம்மா அமைப்பைச் சேர்ந்த இமாம் அலி, ஹைதர் அலி உள்ளிட்டோர் திருமங்கலம் காவல் நிலையம் அருகேபோலீஸ் காவலிலிருந்து தப்பியோடினர். இதைத் தொடர்ந்து அடுத்த நாளே ஹைதர் அலி பிடிபட்டார். இமாம்அலி சிக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி இமாம் அலி பெங்களூரில் தமிழக போலீஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
சுட்டுக் கொல்லப்பட்ட இமாம் அலியின் உடல் அவரது சொந்த ஊரான மதுரை நெல்பேட்டை பகுதியில் உள்ளதர்ஹாவில் அடக்கம் செய்யப்பட்டது. இன்று இமாம் அலி இறந்ததன் முதலாமாண்டு நினைவு தினம்அனுசரிக்கப்படுகிறது.
இதையடுத்து நெல்பேட்டை, திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் பதற்றம் நிலவியது. நகர் முழுவதிலும் போலீஸ்பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே, திண்டுக்கல் நீதிமன்றம், ஆட்சித் தலைவர் அலுவலகம் ஆகியவற்றில் வெடிகுண்டுவைக்கப்பட்டிருப்பதாக தொலைபேசி மிரட்டல் வந்தது. இதையடுத்து போலீஸார் அங்கு தீவிர சோதனைநடத்தினர். ஆனால் குண்டு எதுவும் சிக்கவில்லை.