பார்த்திபன்-- சீதா "டைவர்ஸுக்கு" விண்ணப்பம்
சென்னை:
கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வரும் இயக்குனர்- நடிகர் பார்த்திபன் மற்றும் நடிகை சீதா ஆகியோர்முறைப்படி விவாகரத்து கேட்டு குடும்ப நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.
புதிய பாதை படத்தின் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பார்த்திபன்.அந்தப் படத்தின் நாயகியாக நடித்தவர் சீதா. முதல் படத்திலேயே இருவருக்கும் காதல் ஏற்பட்டு, அதுகல்யாணத்தில் முடிந்தது.
இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த இந்த நட்சத்திர தம்பதிகள், பின்னர் ராதாகிருஷ்ணன் என்ற ஆண்குழந்தையையும் தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.
அமைதியான நதி போல ஓடிக் கொண்டிருந்த இவர்களது காதல் வாழ்க்கை திடீரென தடைபட்டது. பல்வேறுகாரணங்களுக்காக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில மாதங்களுக்கு முன் தனித்தனியாகவசிக்க ஆரம்பித்தனர்.
பிரிவுக்குப் பின் தீவிரமாக டிவி மற்றும் சினிமாவில் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். உடன் நடிக்கும் ஒரு டிவிநடிகருடனும் சீதா கிசுகிசுக்கப்படுகிறார்.
இந் நிலையில் தற்போது விவாகரத்து கோரி இருவரும் தனித்தனியாக குடும்ப நீதிமன்றத்தில்விண்ணப்பித்துள்ளனர்.
விவாகரத்து கேட்கும் தம்பதிகளின் மனு மீது 6 மாதம் கழித்தே விசாரணை நடத்தப்படுவது வழக்கம். இதனால்,அடுத்த மார்ச் மாதம் இவர்களது விவாகரத்து மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications