வைகோ காவல் அக்டோபர் 6 வரை நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் சிறைக் காவல் அக்டோபர் 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் வைகோ உள்ளிட்ட 9 மதிமுகவினரும் ஆஜர் செய்யப்பட்டனர். அப்போதுவிசாரிக்கப்பட வேண்டிய அரசுத் தரப்பு சாட்சி ஞானகேசவன் உடல் நலக்குறைவால் நீதிமன்றத்திற்கு வர முடியாதநிலையில் இருப்பதால் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று அரசு வக்கீல் ஜெயக்குமார் கோரிக்கைவிடுத்தார்.
இதை ஏற்ற நீதிபதி ராஜேந்திரன் அக்டோபர் 6ம் தேதிக்கு விசாரணையைத் தள்ளி வைத்தார். புலிகளை ஆதரித்துப்பேசியதாக தொடரப்பட்டுள்ள பொடா வழக்கில் தற்போது சாட்சிகள் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணைநடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications