For Quick Alerts
For Daily Alerts
Just In
கோட்டை ஊழியர்களுக்கு மேலும் 3 மாதங்களுக்கு எஸ்மா!
சென்னை:
சென்னை தலைமைச் செயலக ஊழியர்களுக்கு மேலும் 3 மாதங்களுக்கு எஸ்மா சட்ட விதிகள் அமலில் இருக்கும்என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள் போராட்டத்தையடுத்து எஸ்மா மற்றும் டெஸ்மா சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்தது.அந்த சட்டம் தற்போது தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது.
தலைமைச் செயலக ஊழியர்களுக்கு அமலாக்கப்பட்ட எஸ்மா சட்டம் 3ம் தேதியுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து சனிக்கிழமை முதல் இந்த சட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.இதனால் அடுத்த 3 மாதங்களுக்கும் வேலை நிறுத்தம் செய்ய முடியாது.


