அத்வானியுடன் பேச முயன்ற ஜெயலலிதா
டெல்லி:
மத்திய அமைச்சர் கண்ணப்பனைக் கைது செய்யக் கூடாது என தமிழக அரசுக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து கடிதம் வந்ததையடுத்து கடுப்பான முதல்வர் ஜெயலலிதா துணைப் பிரதமர் அத்வானியுடன் பேச முயன்றதாகவும், ஆனால் அது முடியாமல் போய்விட்டதாகவும் தெரிகிறது.
புலிகளை ஆதரித்ததற்காக கண்ணப்பனை பொடாவில் கைது செய்யப் போவதாகவும், அதற்கு வசதியாக அவரை பதவியை விட்டு நீக்குமாறும், அவ்வாறு நீக்காவிட்டாலும் கூட கைது உறுதி எனவும் பிரதமர் வாஜ்பாய்க்கு முதல்வர் கடிதம் எழுதினார்.
இதையடுத்து பிரதமரைச் சந்தித்த கண்ணப்பன் தனது தரப்பு நியாயத்தை விளக்கி ஒரு கடிதம் கொடுத்தார்.
இந்த இரு கடிதங்களையும் சட்ட அமைச்சகதத்தின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்தார் வாஜ்பாய்.
இந்தக் கடிதங்கள் குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய சட்ட அமைச்சர் அருண் ஜேட்லி, இந்தக் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் ஜெயலலிதா அனுப்பிய கடிதம், ஒரு பிரதமருக்கு முதல்வர் எழுதும் கடிதம் போல இல்லை, அது மிகக் கடுமையாக உள்ளது. இதனால் மிகக் கடுமையாகவே பிரதமரும் பதில் அனுப்ப வேண்டும் என பிரதமர் அலுவலக மூத்த அதிகாரிகள் கருத்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக பிரதமரின் ஆலோசகர் பிரஜேஷ் மிஸ்ரா, ஜெயலலிதாவின் கடிதம் கண்டு படு கோபமடைந்ததாகவும், கண்ணப்பனைக் கைது செய்ய அனுமதிக்கவே கூடாது என்று கூறிவிட்டதாகவும் தெரிகிறது.
இதையடுத்து பிரதமர் அலுவலகத்தில் இருந்து நேற்று காலை (சனிக்கிழமை) தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், கண்ணப்பனின் பேச்சு பொடா சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியதா இல்லையா என்று சட்ட அமைச்சகம் ஆராய்ந்து கொண்டுள்ளது. சட்ட அமைச்சகத்தின் பதில் கிடைக்கும் முன் அவரைக் கைது செய்து நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு வீணாக ஊறு விளைவிக்க வேண்டாம். தமிழக அரசு அவசரப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும் கூறப்பட்டிருந்தது.
இந்தத் கடிதத்தைக் கண்டு கடும் கோபமடைந்த முதல்வர் அது குறித்து துணைப் பிரதமர் அத்வானியுடன் பேச முயன்றதாகவும், ஆனால் அவர் தனது மகனின் திருமண நிகழ்ச்சியில் பரபரப்பாக இருந்ததால் அவருடன் பேச ஜெயலலிதாவுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை என்றும் தெரிகிறது.
இது குறித்து அத்வானியுடன் பேச பலமுறை முயன்றும் முடியாமல் போனதால், கடைசி நேரத்தில் தனது டெல்லி பயணத்தை முதல்வர் ரத்து செய்தார் என்கிறார்கள்.
-
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா?












Click it and Unblock the Notifications