அத்வானியுடன் பேச முயன்ற ஜெயலலிதா
டெல்லி:
மத்திய அமைச்சர் கண்ணப்பனைக் கைது செய்யக் கூடாது என தமிழக அரசுக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து கடிதம் வந்ததையடுத்து கடுப்பான முதல்வர் ஜெயலலிதா துணைப் பிரதமர் அத்வானியுடன் பேச முயன்றதாகவும், ஆனால் அது முடியாமல் போய்விட்டதாகவும் தெரிகிறது.
புலிகளை ஆதரித்ததற்காக கண்ணப்பனை பொடாவில் கைது செய்யப் போவதாகவும், அதற்கு வசதியாக அவரை பதவியை விட்டு நீக்குமாறும், அவ்வாறு நீக்காவிட்டாலும் கூட கைது உறுதி எனவும் பிரதமர் வாஜ்பாய்க்கு முதல்வர் கடிதம் எழுதினார்.
இதையடுத்து பிரதமரைச் சந்தித்த கண்ணப்பன் தனது தரப்பு நியாயத்தை விளக்கி ஒரு கடிதம் கொடுத்தார்.
இந்த இரு கடிதங்களையும் சட்ட அமைச்சகதத்தின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்தார் வாஜ்பாய்.
இந்தக் கடிதங்கள் குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய சட்ட அமைச்சர் அருண் ஜேட்லி, இந்தக் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் ஜெயலலிதா அனுப்பிய கடிதம், ஒரு பிரதமருக்கு முதல்வர் எழுதும் கடிதம் போல இல்லை, அது மிகக் கடுமையாக உள்ளது. இதனால் மிகக் கடுமையாகவே பிரதமரும் பதில் அனுப்ப வேண்டும் என பிரதமர் அலுவலக மூத்த அதிகாரிகள் கருத்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக பிரதமரின் ஆலோசகர் பிரஜேஷ் மிஸ்ரா, ஜெயலலிதாவின் கடிதம் கண்டு படு கோபமடைந்ததாகவும், கண்ணப்பனைக் கைது செய்ய அனுமதிக்கவே கூடாது என்று கூறிவிட்டதாகவும் தெரிகிறது.
இதையடுத்து பிரதமர் அலுவலகத்தில் இருந்து நேற்று காலை (சனிக்கிழமை) தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், கண்ணப்பனின் பேச்சு பொடா சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியதா இல்லையா என்று சட்ட அமைச்சகம் ஆராய்ந்து கொண்டுள்ளது. சட்ட அமைச்சகத்தின் பதில் கிடைக்கும் முன் அவரைக் கைது செய்து நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு வீணாக ஊறு விளைவிக்க வேண்டாம். தமிழக அரசு அவசரப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும் கூறப்பட்டிருந்தது.
இந்தத் கடிதத்தைக் கண்டு கடும் கோபமடைந்த முதல்வர் அது குறித்து துணைப் பிரதமர் அத்வானியுடன் பேச முயன்றதாகவும், ஆனால் அவர் தனது மகனின் திருமண நிகழ்ச்சியில் பரபரப்பாக இருந்ததால் அவருடன் பேச ஜெயலலிதாவுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை என்றும் தெரிகிறது.
இது குறித்து அத்வானியுடன் பேச பலமுறை முயன்றும் முடியாமல் போனதால், கடைசி நேரத்தில் தனது டெல்லி பயணத்தை முதல்வர் ரத்து செய்தார் என்கிறார்கள்.
-
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்!












Click it and Unblock the Notifications