7 பேர் பலி: ஊரையே காலி செய்ய வைக்கும் வினோத நோய்!
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் காளிங்காபுரம் என்ற கிராமத்தில் பெயர் தெரியாத வினோத நோய்க்கு இதுவரை 7 பேர்பலியாகியுள்ளனர்.
இதனால் ஊர் மக்கள் கிராமத்தைக் காலி செய்து விட்டு பக்கத்து கிராமங்களுக்கு ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ளது காளிங்காபுரம். இந்தக் கிராமத்தில் கடந்த ஒரு மாதமாகவிநோத நோய் வந்து ஊரையே பீதியில் ஆழ்த்தியுள்ளது.
வாந்தி, உதடு, நாக்கு கருப்பு நிறத்திற்கு மாறுவது, விரல் நகங்களில் நீல நிறம் ஏற்படுவது, மயக்கம் ஆகியவையேஇந்த நோயின் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் தென்படுவோர் உடனடியாக இறந்து விடுகின்றனர். இதுவரைஆண், பெண், குழந்தை என 7 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த விநோத நோய் குறித்து சுகாதாரத் துறையினர் கிராமத்திற்கு வந்து முகாமிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.ஆனால் இதுவரை இது என்ன நோய் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
விநோத நோயால் பாதிக்கப்பட்ட 16 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய்தொடர்ந்து பரவி வருவதால் ஊர் மக்களில் பலர் காலி செய்து விட்டு பக்கத்து கிராமங்களில் குடியேறிவருகின்றனர்.












Click it and Unblock the Notifications