தென் மாவட்ட அணைகள் நிரம்புகின்றன!
மதுரை:
தென் மாவட்ட அணைகள் மழையால் நிரம்பி வழிகின்றன. இதனால் அப்பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை நிரம்பி வழிகிறது. மஞ்சளாறு, வைகைஆகிய அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் தென் மாவட்ட விவசாயிகள்மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையின் மொத்த கொள்ளளவு 126 அடியாகும். தற்போது 126.5அடி தண்ணீர் உள்ளதால் அணை நிரம்பி வழிகிறது. தொடர்ந்து அப்பகுதியில் கன மழை பெய்து வருவதால் அணைநிரம்பி வழிவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதேபோல, மஞ்சளாறு அணையும் வேகமாக நிரம்பி வருகிறது. அணையின் மொத்த கொள்ளளவு 57 அடியாகும்.தற்போது அணையில் 45.50 அடி நீர் இருப்பு உள்ளது.
தென் மாவட்டங்களின் மிகப் பெரும் அணையான வைகை அணைக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. தொடர்ந்துகன மழையும் பெய்து வருவதால் ஒரே நாளில் 6 அடி நீர் உயர்ந்துள்ளது.
வைகை அணையின் மொத்த கொள்ளளவு 71 அடியாகும். இதில், தற்போது 33.7 அடி நீர் உள்ளது. தொடர்ந்துமழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயரும் வாய்ப்புள்ளது.
அதேபோல, பெரியார் அணையிலும் நீர் மட்டம் திருப்திகரமாக உள்ளதாக பொதுப்பணித்துறைஅதிகாரிகள்கூறியுள்ளனர். அணையில் தற்போது 121.5 அடி நீர் உள்ளது. மொத்த கொள்ளளவு 136 அடியாகும்.