வரதட்சணை கொடுமை: அதிமுக எம்.எல்.ஏ. கணவருக்கு ஜாமீன் மறுப்பு
சென்னை:
வரதட்சணை கொடுமை செய்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏ. கருப்பாயியின் கணவர்கருப்பையாவுக்கு ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் கொளத்தூர் தொகுதி அதிமுக உறுப்பினர் கருப்பாயி. தனது கணவர் கருப்பையாவரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தியதாகவும், கொலை செய்ய முயன்றதாகவும் கூறி சென்னை ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் கருப்பாயி.
இதையடுத்து கருப்பையா கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீன் கோரி சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில்கருப்பையா மனு செய்தார். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இதைத் தொடர்ந்துஉயர்நீதிமன்றத்தை அணுகினார் கருப்பையா.
அதை விசாரித்த நீதிபதி கற்பகவிநாயகம், முதல் திருமணத்தை மறைத்து விட்டு கருப்பாயியை இரண்டாவதாகதிருமணம் செய்துள்ளார் கருப்பையா.மேலும், அடிக்கடி குடித்து விட்டு வந்தும் எம்.எல்.ஏ.வை சித்திரவதைசெய்துள்ளார். இவரை விடுவித்தால் கருப்பாயியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று போலீஸ் தரப்பில்கூறப்பட்டுள்ளது.
எனவே குற்றப்பத்திக்கை தாக்கல் செய்யப்படும் வரை கருப்பையாவை ஜாமீனில் விடுதலை செய்யக் கூடாது என்றுகூறி மனுவை நிராகரித்தார்.












Click it and Unblock the Notifications