For Daily Alerts
Just In
குண்டர் தடுப்புச் சட்டத்தில் பஞ்சாயத்துத் தலைவர் கைது
திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பஞ்சாயத்து யூனியன் தலைவர் உமாசங்கர் கொலை வழக்கில், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் உமக் காடு கிராமத்தைச் சேர்ந்த அருணாச்சல நாடார் என்பவன் மகன் முத்துவேல், கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி சிலரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக உமாசங்கர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். உமாசங்கர் மீது ஏகப்பட்ட கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சித் தலைவருக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து உமாசங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சித் தலைவர் ராஜாராம் உத்தரவிட்டார்.
Comments
vijay chennai astrology surya Ajith Pooja madhavan kodaikanal simran kiran uranium electricity mani kural art gallery florals jothika amoga
Story first published: Friday, October 17, 2003, 5:30 [IST]