தனியார்மயமாகிறது ஊட்டி இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனம்
சென்னை:
ஊட்டியில் உள்ள பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் (எச்.பி.எப்) தொழிற்சாலையைசீரமைக்கும் பணியில், தனியார் துறையினரை ஈடுபடுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக உள்துறைஅமைச்சர் எல்.கே.அத்வானி, முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
எச்.பி.எப். தொழிற்சாலையை நலிவடைந்த நிலையிலிருந்து மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுஉள்துறை அமைச்சர் அத்வானிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார்.
இந்தக் கடிதத்திற்கு அத்வானி பதில் அனுப்பியுள்ளார். அதில், எச்.பி.எப். தொழிற்சாலையை சீரமைக்க தனியாரைஈடுபடுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கான பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டிய தனியார்நிறுவனத்தை தேர்வு செய்யும் நடவடிக்கை தீவிரமாக நடந்து வருகிறது என்று கூறியுள்ளார்.
மத்திய அரசின் முயற்சிகளுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று ஏற்கனவே ஜெயலலிதாகூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications