பஞ்சாலை தொழிலாளர் வேலைநிறுத்தம் அக்.22ம் தேதிக்கு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவையில் போனஸ் கோரி பஞ்சாலைத் தொழிலாளர்கள் இன்று முதல் நடத்துவதாக இருந்த வேலை நிறுத்தப்போராட்டம் 22ம தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கோவையில் உள்ள ஆயிரக்கணக்கான பஞ்சாலைத் தொழிற்சாலைகளில் பணியாற்றும் சுமார் 1 லட்சம்தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது குறித்து தொழிற்சங்கத் தலைவர்களுக்கும்,நிர்வாகத்தினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இதில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் இன்று முதல் வேலை நிறுத்தம் செய்ய தொழிற்சங்கங்கள் அழைப்புவிடுத்திருந்தன. இந்நிலையில் போராட்டக் கூட்டுக்குழு கோவையில் நடந்தது.
இதில்,பேச்சுவார்த்தை சுமுகமாக நடக்க வகை செய்யும் விதத்தில்இன்றைய போராட்டம் அக்டோபர் 22ம் தேதிக்குதள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications