ஐரோப்பிய பயணம்: புலிகள் குழு இலங்கை திரும்பியது
கொழும்பு:
கடந்த சில வாரங்களாக ஐயர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் சட்ட நிபுணர்கள் மற்றும் தங்களது பிரதிநிதிகளுடன்ஆலோசனைகள் நடத்திய விடுதலைப் புலிகளின் குழு இன்று இலங்கை திரும்பியது.
புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான இந்தக் குழுவினர் இன்று காலைகொழும்பு பண்டாரநாயகே விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தனர். உடனடியாக அவர்கள் ராணுவஹெலிகாப்டர் மூலம் வன்னி பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
வட கிழக்கு இலங்கையில் தங்களது தலைமையில் இடைக்கால நிர்வாகம் அமைப்பது தொடர்பானவரையறைகளையும், திட்டங்களையும் வகுக்க புலிகளின் குழு ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றது. கடந்த 2ம் தேதிஐயர்லாந்து சென்ற இந்தக் குழுவினர் பின்னர் நார்வே மற்றும் சுவீடனுக்கும் சென்றனர்.
நார்வேயில் அந் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜேன் பீட்டர்சனையும் இந்தக் குழு சந்தித்தது.
ஐயர்லாந்தின் டூப்லின் நகரில் சட்ட வல்லுனர்களுடன் தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழுவினர் மிகத்தீவிரமான, மிக நீண்ட ஆலோசனைகளை நடத்தினர்.












Click it and Unblock the Notifications