தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாநிலத்தின் பல இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது.
வங்கக்கடலின் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்து வருகிறது.
மேலும் 48 மணி நேரங்களுக்கு ஆங்காங்கே மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. மாநிலத்திலேயே அதிக அளவாக திருச்சி மணப்பாறையில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னையில் நேற்று கனமழை பெய்தது.
தமிழகம் முழுவதும் இன்றும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.












Click it and Unblock the Notifications