தற்காலிக அரசு ஊழியை விபத்தில் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் தற்காலிக ஊழியையாக பணியாற்றி வந்த பிரமிளா என்பவர், அரசுப்பேருந்து மோதி பரிதாபமாக பலியானார்.
சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்தவர் பிரமிளா (40). இவர் தலைமைச் செயலக போக்குவரத்துத்துறையில் தற்காலிக ஊழியையாக பணியாற்றி வந்தார்.
தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, ஆவடி நோக்கிச் சென்ற அரசு பேருந்து, அவர்களதுமோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பிரமிளா தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
பிரமிளா, சில மாதங்களுக்கு முன்பு நடந்த அரசு ஊழியர் வேலைநிறுத்தத்தின்போதுதான் தற்காலிக ஊழியராகஅரசுப் பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications