For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் மீது திடீர் வழக்கு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை மாநகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜனை முற்றுகையிட்டதாகவும், அவைக் காவலர்களைத்தாக்கியதாகவும் திமுகவைச் சேர்ந்த 5 கவுன்சிலர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நேற்று சென்னை மாநகராட்சியிக் கூட்டத்தில் ஒரு பிரச்சனை தொடர்பாக புகார் சொல்ல திமுக கவுன்சிலர்களுக்குஅனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்து அங்கு பெரும் அமளிஏற்பட்டது.

அவைக் காவலர்கள் வரவழைக்கப்பட்டு திமுக கவுன்சிலர்கள் குண்டுக்கட்டாக தூக்கி செல்லப்பட்டுவெளியேற்றப்பட்டனர். அப்போது திமுக பெண் கவுன்சிலர் செல்லம்மாள் என்பவருக்கு நெஞ்சில் அடிபட்டுமயங்கி விழுந்தார். பின்னர் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந் நிலையில் மகேஸ்வரி, ஜெகதீசன் உள்ளிட்ட 5 திமுக கவுன்சிலர்கள் மீது சென்னை பெரியமேடு போலீஸார்இன்று திடீரென வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

துணை மேயர் கராத்தே தியாகராஜனை முற்றுகையிட்டதாகவும், அவைக் காவலர்களைத் தாக்கியதாகவும் அவர்கள்மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X