மருமகளிடம் செக்ஸ் லீலை: துணைவேந்தரின் மகன் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மருமகள் சங்கீதாவிடம் தவறாக நடந்து கொண்ட சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் சேதுபதிராமலிங்கம் மீதான வழக்கில் திடீர் திருப்பம் நிகழ்ந்துள்ளது.

அமெரிக்காவில் வசிக்கும் அவரது மகன் ராஜவேல், அடுத்த மாதம் 10 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்று நீதிபதி கற்பக விநாயகம் உத்தரவிட்டார். அதுவரை இந்த வழக்கில் யாரையும் கைதுசெய்யக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

சங்கீதாவை திருமணம் முடித்த 7வது நாளில் ராஜவேல் அமெரிக்கா சென்றுவிட்டார். அதன்பின் தனது வீட்டில்தங்கியிருந்த சங்கீதாவை செக்ஸ்ரீதியில் துன்புறுத்தி வந்துள்ளார் துணைவேந்தர் சேதுபதி.

இதையடுத்து சங்கீதா வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் கைதாவதில் இருந்து தப்ப துணைவேந்தர், அவரதுமனைவி, மகள், அமெரிக்காவில் வசிக்கும் மகன் சேதுபதி உட்பட 5 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர்,

இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி எம். கற்பக விநாயகம், இடைக்கால உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.

தனது உத்தரவில், சங்கீதாவின் கணவர் ராஜவேல் இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு ஒன்றில் தனதுமனைவியுடன் சேர்ந்து வாழ விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். இதற்கு முதலில் மறுப்பு தெரிவித்த சங்கீதா,அவரது கணவருடன் 6,7 முறை தொலைபேசியில் பேசியதைத் தொடர்ந்து இப்போது சம்மதம் தெரிவித்துள்ளார்.

கணவர் முறையாக உறுதிமொழி அளித்தால் அவருடன் வாழ விரும்புவதாக சங்கீதா கூறியுள்ளார்.

துணைவேந்தர் தனது தவற்றை உணர்ந்துவிட்டதாகவும், எதிர்காலத்தில் மகன், மருமகளை சந்தோசமாக வாழவைப்பதாகவும் உறுதியளித்துள்ளார். எனவே ராஜவேல் அடுத்த மாதம் 10ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும். அதன்பின் மேற்கொண்டு உத்தரவுகளை வழங்குவேன் என்றார் நீதிபதி கற்பக விநாயகம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+