இடைக்கால நிர்வாகம்: அடுத்த வாரம் புலிகளின் மாற்று திட்டம் அறிவிப்பு
கொழும்பு:
வட கிழக்கு இலங்கையில் இடைக்கால நிர்வாகம் அமைப்பது குறித்த தங்களது மாற்றுத் திட்டத்தை அடுத்த வாரம்வெளியிடப் போவதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
இடைக்கால நிர்வாகம் குறித்த அரசின் திட்டத்தில், தாங்கள் விரும்பும் மாற்றங்களைச் சேர்த்து இந்த புதியதிட்டத்தை புலிகள் வழங்கவுள்ளனர்.
தங்களது திட்ட அறிக்கையை அடுத்த வெள்ளிக்கிழமை (31ம் தேதி) நார்வே அமைதிக் குழுவினரிடம்அளிக்கவுள்ளதாக புலிகளின் செய்தித் தொடர்பாளர் தயா மாஸ்டர் இன்று தெரிவித்தார்,
இதையடுத்து புலிகள்- இலங்கை அரசுக்கு இடையிலான பேச்சுவார்த்தை மீண்டும் துவங்கும். புலிகளின் இந்தஅறிக்கை, அமைதிப் பேச்சுவார்த்தையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்பு செய்வதிலும், புலம் பெயர்ந்த தமிழர்களை மீண்டும்குடியமர்த்துவதிலும் அரசு மெத்தனமாகச் செயல்படுகிறது என்று குற்றஞ்சாட்டி, பேச்சு வார்த்தைகளில் இருந்துபுலிகள் கடந்த ஏப்ரல் மாதம் விலகிக் கொண்டனர்.
வட கிழக்கு மாகாணத்தில் அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரங்களை புலிகள் கோருவது, பேச்சுவார்த்தையைத் தொடர்வதில் அவர்களுக்கு உள்ள ஆர்வத்தையே காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள்கருதுகின்றனர்.