நெடுமாறனின் சிறைக் காவல் நவ. 7ம் தேதி வரை நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்டஅந்த அமைப்பைச் சேர்ந்த 5 பேரின் சிறைக் காவலும் நவம்பர் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றக் காவல் முடிவடைவதையொட்டி பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் நெடுமாறன், சுப. வீரபாண்டியன்,பாவாணன், டாக்டர் தாயப்பன், ஷாகுல் ஹமீது ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அரசுத் தரப்புசாட்சியான மாசானம் சாட்சியம் அளித்தார்.
அதன் பின்னர் வழக்கு விசாரணையை வரும் நவம்பர் 7ம் தேதிக்கு நீதிபதி ராஜேந்திரன் ஒத்திவைத்தார்.அத்தோடு, நெடுமாறன் உள்ளிட்டவர்களின் காவலையும் நவம்பர் 7ம் தேதி வரை நீட்டித்தார்.












Click it and Unblock the Notifications