தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு: மீண்டும் துவக்கத்தில் இருந்து விசாரணை தொடங்கியது
சேலம்:
தர்மபுரியில் விவசாயக் கல்லூரி மாணவிகள் சென்ற பஸ் எரிக்கப்பட்டு 3 மாணவிகள் கொல்லப்பட்டதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது.
கடந்த 2000ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக கொடைக்கானல் பிளசன்ட்ஸ்டே ஹோட்டல் வழக்கில் விதிக்கப்பட்ட சிறை தண்டனையை கண்டித்து தமிழகம் முழுவதிலும் அதிமுகவினர்வன்முறையில் ஈடுபட்டனர்.
இதில் கோவை விவசாயக் கல்லூரி மாணவிகள் சென்ற பஸ், தர்மபுரியில் தடுத்து நிறுத்தப்பட்டது. உள்ளேமாணவிகள் இருப்பதைக் கூட கண்டுகொள்ளாத அதிமுக கும்பல் பஸ்சுக்கு தீ வைத்தது.
அந்தக் கோர சம்பவத்தில் காயத்திரி, கோகிலவாணி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகளும் பரிதாபமாகஉயிரிழந்தனர்.
தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் நடந்து வந்தது.ஆனால், போலீஸ் மற்றும் அதிமுக கூட்டணி இந்த விசாரணையை திசை திருப்பியது.
வழக்கை அதிமுகவினருக்கு சாதகமாக போலீசார் நடத்தினர். அதிமுகவினரிடம் இருந்து பணம், கோழி பிரியாணி,குவாட்டர் பாட்டில்களை வாங்கிக் கொண்டு இந்த வேதனையான வழக்கை கேலிக்குறியதாக்கினர் காக்கிச்சட்டைகள்.
இதையடுத்து கருகி இறந்த மாணவிகளில் ஒருவரான கோகிலவாணியின் தந்தை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார். வழக்கின் போக்கைக் கண்டு கடும் கோபமடைந்த உயர் நீதிமன்ற நீதிபதி, இந்த வழக்கைகிருஷ்ணகிரியில் இருந்து சேலம் முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிட்டார்.
மேலும் விசாரணையை மீண்டும் ஆரம்பத்தில் இருந்து நடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் இன்று நீதிபதி கிருஷ்ணராஜா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போதுகுற்றம் சாட்டப்பட்ட 31 பேரில் 30 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். பின்னர் வழக்கை அடுத்த மாதம்13ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் கிருஷ்ணகிரியில் இருந்து சேலத்திற்குக் கொண்டு வரப்பட்டுபோலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications