பிரண்ட்லைன் பெண் நிருபருக்கு அமெரிக்க விருது
நியூயார்க்:
த இந்து நாளிதழ் நிறுவனத்தைச் சேர்ந்த பிரண்ட்லைன் இதழின் நிருபர் ஆஷா கிருஷ்ணகுமாருக்கு கொலம்பியாபல்கலைக்கழகத்தின் கர்ட் ஸ்ஹார்க் விருது வழகப்பட்டுள்ளது.
நியுயார்க் டைம்சில் எழுதி வரும் அமெரிக்காவைச் சேர்ந்த பிரிலான்ஸ் பத்திரிக்கையாளர் எலிசெபத் ரூத் மற்றும்ஆஷாவுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
சியாரா லியோன் நாட்டில் உள்நாட்டுப் போரின்போது, அது குறித்து ராய்ட்டர் செய்தி நிறுவனத்தின் சார்பில்செய்தி சேகரிக்கச் சென்ற கர்ட் ஸ்ஹார்க், துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டார். அவரது நினைவாக இந்தவிருதை கொலம்பியா பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது.
இந்த விருதுடன் 10,000 அமெரிக்க டாலர்களும் பரிசாக வழங்கப்படும்.
சமூக மேம்பாட்டுக்காக சிறப்பாக பணியாற்றும் வளரும் நாட்டைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் மற்றும் சர்வதேசசெய்தி சேகரிப்பாளர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications