ஜெ. கோபம்: கருத்து சொல்ல அத்வானி மறுப்பு
சென்னை:
பொடா சட்டத் திருத்தத்தின்படி, பொடா ஆய்வுக் குழு எடுக்கும் முடிவுகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள்கட்டுப்பட வேண்டும் என்று துணைப் பிரதமர் அத்வானி கூறியுள்ளார்.
பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநர் மல்கானியின் இறுதிச் சடங்கில்கலந்து கொள்வதற்காக அத்வானி புதுவைசென்றார். பின்னர் டெல்லி திரும்பும் வழியில் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் தங்கினார்.
அப்போது பொடா சட்டத் திருத்தத்திற்கு முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறித்து நிருபர்கள்அத்வானியிடம் கேட்டபோது, அதுகுறித்துக் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை.
பொடா சட்டத் திருத்தம், மத்திய அமைச்சரவை எடுத்த முடிவு. அதில் கூறியுள்ளபடி, பொடா ஆய்வுக் குழுவின்முடிவுகள் மத்திய மற்றும் மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தும், அம்முடிவுகளுக்கு மாநில மற்றும் மத்திய அரசுகட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications