புதிய தலைமை செயலக கட்டடம்: ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு டி.ஆர். பாலு எச்சரிக்கை
சென்னை:
புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தொடர்பாக, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவைக்கடைப்பிடிக்கத் தவறும் தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல்அமைச்சர் டி.ஆர்.பாலு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ரூ. 400 கோடியில் புதிய தலைமைச் செயலகம் கட்ட தமிழக அரசுமுடிவு செய்துள்ளது. நேற்று இதற்கான பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடந்தது.
பூமி பூஜைக்கு சில நாட்களுக்கு முன் மத்திய சுற்றுச்சூழல் துறை புதிய அரசாணை ஒன்றைப் பிறப்பித்தது.
அதில், ரூ. 50 கோடிக்கு மேற்பட்ட திட்டப் பணிகள், தினசரி 1,000 பேருக்கும் மேல் வந்து போகும் அலுவலகவளாகங்கள் கட்ட வேண்டுமானால், சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் முன் அனுமதி பெற வேண்டும் என்றுகூறப்பட்டிருந்தது.
ஆனால் இந்த அனுமதி பெறாமலேயே அடிக்கல் நாட்டு விழா நடந்தது. முதல்வர் ஜெயலலிதா, பூமி பூஜை செய்துஅடிக்கல் நாட்டினார்.
இந் நிலையில் இன்று டெல்லியிலிருந்து சென்னை வந்த டி.ஆர்.பாலு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்பேசுகையில், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் மத்திய அரசின் உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.அதை மீறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை நிச்சயம் என்றார்.