டிஸ்மிஸ் ஆன அரசு ஊழியர்களிடம் விசாரணை முடிந்தது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6,072 அரசு ஊழியர்களிடம் இன்றோடு விசாரணை முடிவடைந்தது.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் 3நீதிபதிகள் அடங்கிய குழு கடந்த 2 மாதமாக விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணை இன்றோடுமுடிவடைந்தது.
விசாரணைக்கு வர இயலாத 30 பேரிடம் கடைசியாக இன்று விசாரணை நடந்தது. இதையடுத்து இன்றோடுவிசாரணை முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
3 நீதிபதிகளும் தங்களது தீர்ப்பை அரசுக்கு அறிக்கையாக அனுப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதையடுத்தே டிஸ்மிஸ் ஆன ஊழியர்களுக்கு மீண்டும் பணியில் சேர்க்கப்படுவார்களா, இல்லையா என்பதுதெரிய வரும்.












Click it and Unblock the Notifications