பாக். மீது படையெடுக்க தொகாடியா கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
மதுரை :
பாகிஸ்தானின் கொள்கையே பயங்கரவாதம்தான். எனவே அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குப்பதிலாக ராணுவத் தாக்குதல் நடத்துவதுதான் சரியான செயலாக இருக்க முடியும் என்று விஸ்வ இந்து பரிஷத்அமைப்பின் துணைத் தலைவர் பிரவீண் தொகாடியா கூறியுள்ளார்.
தேவர் குருபூஜைக்காக மதுரை வந்த பிரவீண் தொகாடியா, கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலைஅணிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்துக்களின் உரிமைகளுக்காகப் போராடியவர்முத்துராமலிங்கத் தேவர். அவருக்கு அஞ்சலி செலுத்தவே வந்துள்ளேன்.
பாகிஸ்தானுடன் பேச்சு நடத்துவதால் ஒரு லாபம் கிடையாது. அந்த நாட்டின் முக்கியக் கொள்கையேபயங்கரவாதம்தான். எனவே ராணுவ ரீதியான நடவடிக்கைதான் சரியானதாக இருக்க முடியும் என்றார்தொகாடியா.












Click it and Unblock the Notifications