For Daily Alerts
Just In
9 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 65 வயது முதியவர் கைது
திருச்சி:
திருச்சி அருகே 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 65 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.
தொட்டியத்தை அடுத்த காட்டுப்புத்தூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி (பெயர், விவரம் மறைக்கப்பட்டுள்ளது) நான்காம்வகுப்பு படித்து வருகிறாள். இச் சிறுமி டியூசனும் படித்து வருகிறாள்.
சமீபத்தில் மாலை நேரத்தில் டியூசன் சென்டரில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த இச் சிறுமியிடம் சென்றராமசாமி (வயது65) என்பவர், பென்சில் வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளார்.
ஊருக்கு வெளியே ஒரு குடிசையில் வைத்து சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து அச் சிறுமிஅழுதவாறே வீட்டுக்கு வந்து விவரத்தை சொல்ல, உடனே அவள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாள்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து ராமசாமியைக் கைது செய்துள்ளனர்.
vijay chennai astrology surya Ajith Pooja madhavan kodaikanal simran kiran thunder electricity mani kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Friday, October 31, 2003, 5:30 [IST]