For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீண்டும் சூடு பிடிக்கிறது வட கிழக்குப் பருவ மழை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சில நாள் இடைவெளிக்குப் பிறகு தமிழகம் முழுவதிலும் மீண்டும் வட கிழக்குப் பருவ மழை சூடு பிடிக்கத்தொடங்கியுள்ளது.

தாமதமாகத் தொடங்கிய வட கிழக்குப் பருவ மழையால் தமிழகம் முழுவதிலும் நல்ல மழை பெய்து வந்தது.ஆனால் கடந்த சில நாட்களாக மழையின் தீவிரம் குறைந்து விட்டது. சென்னையில் சுத்தமாக மழையே இல்லை.

இந்த நிலையில் தற்போது மீண்டும் வட கிழக்குப் பருவ மழை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மாநிலம்முழுவதிலும் பரவலாக கன மழை பெய்து வருகிறது. நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனத்த மழைபெய்துள்ளது.

குற்றாலத்திலும் மழை பெய்து வருவதால் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில்குளிப்பதற்கு தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, கடலூர், விழுப்புரம் ஆகிய பகுதிகளிலும் பரவலான மழை பெய்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம்கமுதி அருகே காவடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி, அழகு ஆகிய இருவரும் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது இடி தாக்கியதில் உயிரிழந்தனர்.

சென்னையிலும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்கு மேல் மழை பெய்யத் தொடங்கி காலை வரையிலும் பெய்தது.இதனால் நகரின் பெரும்பாலான பகுதிகளிலும் வெப்பத்தின் கொடுமை குறைந்தது.

மழை இன்றும் தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் கூறியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X