விதியே, விதியே, தமிழ்ச் சாதியை என் செய நினைத்தாய்?: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இலங்கைத் தமிழர்களின் நிலையை நினைத்தால், விதியே விதியே தமிழ்ச் சாதியை என் செய நினைத்தாய்,எனக்குரையாயோ? என்ற பாடல் வரிதான் நினைவுக்கு வந்து மனதை சம்மட்டியால் தாக்குவது போல உள்ளதாகதிமுக தலைவர் கருணாநிதி வேதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள திடீர் அரசியல் மாற்றங்கள் குறித்து முரசொலி பத்திரிக்கையில் கருணாநிதி கருத்துத்தெரிவிக்கையில், இவ்வாறு வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
இன்னொரு கேள்விக்கு பதிலளித்துள்ள கருணாநிதி, இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்ட பிரச்சினையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தன. ஆனால், பா.ஜ.க மட்டும் வெளிநடப்புசெய்யாமல் அதிமுகவுக்கு அனுசரணையாக நடந்து கொண்டுள்ளது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications